புத்ராஜெயா, மே.28-
மலேசியக் கடல் பகுதியில் மிக அருகி வரும் டுகோங் எனப்படும் கடல்பசு இனத்தைப் பாதுகாப்பதற்கு மீன் வளத்துறை ஒரு விரிவான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.
குறிப்பாக கடல் பசுவின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளான, கடற்பசுக்கள், முதன்மையாக கடற்புற்களை உண்டு வளர்ந்து வருகின்றன. கடற்பசு இனங்களைப் பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற்புற்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவுகிறது என்று அது குறிப்பிட்டுள்ளது.