கோலாலம்பூர், மே.28-
இம்மாதம் 22 ஆம் தேதி முதல் நேற்று வரை கூட்டரசு தலைநகரில் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்பான கூட்டங்கள் எந்தவித பாதுகாப்பு அசம்பாவிதங்களும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்றன.
அனைத்துத் தரப்பினரின், குறிப்பாக வெளியுறவு அமைச்சு மற்றும் மாநாட்டு தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்பால் அனைத்து நாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுக்கான சுமூகமானப் பாதுகாப்புக் கட்டுப்பாடு உறுதிச் செய்யப்பட்டது என்று புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் துணை இயக்குநர் டி.சி.பி. எம்.வி. ஸ்ரீ குமார் கூறினார்.
வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை மாநாடு நடைபெறும் இடத்திற்குக் கொண்டுச் சென்று மீண்டும் அழைத்து வரும் பணி திட்டமிட்டபடி நடந்தது. உச்சநிலை மாநாடு முழுவதும் அனைத்து தரப்பினர் மீதும் பாதுகாப்புக் கட்டுப்பாடும் சிறப்பாக இருந்தது என்று எம்.வி. ஸ்ரீ குமார் குறிப்பிட்டார்.