வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன், மே.29-

2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 6 ஆயிரத்து 100 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை வடக்கு மண்டல பொது நடவடிக்கைப் படை பிஜிஏ கைப்பற்றியது. பினாங்கு பாலச் சந்திப்புக்கு அருகில் உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். வரி செலுத்தப்படாத இந்த சிகரெட்டுகள் நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குச் சந்தைகளுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்டவை என்று பிஜிஏ வடக்கு பிரிகேட் கமாண்டர் ஷாரும் ஹஷிம் தெரிவித்தார். மேலும், பினாங்கு, கெடா, பேரா ஆகிய மாநிலங்களில் மிகக் கடுமையானக் கண்காணிப்புப் பணியில் தமது படைப் பிரிவினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS