இளைஞரின் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது

குவாந்தான், மே.29-

பகாங்கின் சுங்கை பஹாங்கில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படும் 29 வயதுடைய இளைஞரின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. பகாங் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) இயக்குநர் ஸுல்ஃபாட்லி ஸாகாரியா, அவ்விளைஞரின் உடல் இன்று காலை 9.30 மணிக்கு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது, எனத் தெரிவித்தார். மரணம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஜெங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS