மாது மீது மனித வர்த்தகக் கடத்தல் குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, மே.30-

மனித வர்த்தகக் கடத்தலில் ஈடுபட்டதாக மாது ஒருவர் ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

55 வயது ஹலிஸா பாலோக் என்ற மாது நீதிபதி தால்ஹா பாசோக் எம்போக் மோக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி கூலாய், செனாய், செனாய் ஏர்போர்ட் சிட்டியில் ஒரு வர்த்தகப் பெண்மணியான அந்த மாது மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இரண்டு சிறார்களை மனித வர்த்தகக் கடத்தல் புரிந்ததாக அந்த மாது மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS