மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்

ஜோகூர் பாரு, ஜூன்.01-

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்ததில் அதன் ஓட்டுனர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜோகூர், ஜாலான் பெர்மாஸ்- பாசீர் கூடாங் சாலையின் 7.4 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது என்று ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தா்.

கடுமையான காயங்களுக்கு ஆளான 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS