ஜோகூர் பாரு, ஜூன்.01-
மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்ததில் அதன் ஓட்டுனர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜோகூர், ஜாலான் பெர்மாஸ்- பாசீர் கூடாங் சாலையின் 7.4 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது என்று ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தா்.
கடுமையான காயங்களுக்கு ஆளான 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.