எங்களுடன் சந்திப்பு நடத்துவீர்

கோலாலம்பூர், ஜூன்.01-

இவ்வாண்டின் இரண்டாம் அரையாண்டில் இலக்குக்கு உரிய மக்களுக்கான பெட்ரோல் ரோன் 95 விற்பனை முறையை அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பாக, தங்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்துமாறு எண்ணெய் நிலையங்கள் நடத்துநர் சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இலக்குக்கு உரிய பெட்ரோல் ரோன் 95 விற்பனை முறை எவ்வாறு நடத்தப்படுவது, யார் யாருக்கு இவ்வகை எண்ணெய்யை வழங்க முடியும், அதன் விலை நிர்ணயம் தொடர்பில் இதுவரையில் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் எண்ணெய் நிலையங்கள் பெரும் தடுமாற்றத்துடன் இருப்பதாக பூமிபுத்ரா எண்ணெய் நிலையங்கள் நடத்துநர் சங்கத்தின் செயலாளர் ஹானி ஜூலியா ஹாரோன் தெரிவித்தார்.

அரசாங்கம் கொண்டுள்ள உத்தேசத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, எண்ணெய் நிலைங்களின் நடத்துநர்களுடன் அரசாங்கம் சந்திப்பு நடத்துமானால், இது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும் என்று ஹானி ஜூலியா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS