மாரா மாணவர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும்

லண்டன், ஜூன்.01-

புறநகர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பூமிபுத்ரா மாணவர்களுக்கு உதவும் மாரா, தனது உபகாரச் சம்பளத்தின் மூலம் மலேசிய மாணவர்கள், உயர்க்கல்விக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது இவ்வாண்டு முதல் நிறுத்தப்படுவதற்கு உத்தேசித்துள்ளதாக அதன் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

அமெரிக்காவிற்குப் பதிலாக பிரிட்டன், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு மலேசிய மாணவர்கள் அனுப்பப்படுவர் என்று அவர் கூறினார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தலைமையிலான அமெரிக்கக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களும் புதிய கட்டுப்பாடுகளும் கொண்டு வந்திருப்பதைத் தொடர்ந்து மாரா இந்த முடிவை எடுத்துள்ளதாக அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS