ஒன்பது வயது சிறுமி மானபங்கம்: இளைஞர் கைது

மலாக்கா, ஜூன்.02-

கடந்த சனிக்கிழமை மலாக்காவில் ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். தனது நண்பரின் தங்கையான அந்த சிறுமியை ஆடை களையச் செய்து, ஆபாச சேட்டையைப் புரிந்ததாக அந்த ஆடவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து 40 வயது மதிக்கத்தக்க தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறியதைத் தொடர்ந்து அந்த ஆடவரின் வக்கிரச் செயல் தெரிய வந்துள்ளது.

இன்று ஆயர் குரோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவரை, விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

WATCH OUR LATEST NEWS