பெர்மிங்ஹாம், ஜூன்.04-
தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி பிரிட்டிஷ் பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு டத்தோ நிக்கோல் டேவிட்டுக்குப் பிறகு அச்சுற்றுக்கு முன்னேறிய தேசிய வீராங்கனையாக சிவசங்கரி திகழ்கிறார்.
இன்று அதிகாலை பெர்மிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 26 வயது சிவசங்கரி ஜப்பானிய வீராங்கனை சதோமி வாதாநபேவை ஐந்து செட்களில் வீழ்த்தினார். முதல் இரு செட்களில் சிவசங்கரியின் கை ஓங்கியிருந்த வேளை, அடுத்த இரு செட்கள் ஜப்பானிய வீராங்கனை வசம் ஆகின. இறுதியில் உத்வேகம் பெற்ற சிவசங்கரி வாகை சூடினார்.
அடுத்து காலிறுதிச் சுற்றில் சிவசங்கரி எகிப்தைச் சேர்ந்த அமினா ஓர்ஃபிக்கு எதிராகக் களமிறங்குகிறார்.