அந்த பிரிட்டிஷ் பிரஜையின் உடல் லிப்டு குழிக்குள் கிடந்தது

கோலாலம்பூர், ஜூன்.05-

மலேசியாவிற்கு விடுமுறை கழிக்க வந்த 25 வயது பிரிட்டிஷ் பிரஜை, கடந்த 9 நாட்களாக காணாமல் போன நிலையில் அவரின் உடல் கோலாலம்பூர் பங்சார், லோரோங் மாரோஃப்பில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தின் மின் தூக்கிக் குழிக்குள் கிடந்தது உறுதிச் செய்யப்பட்டது.

ஒரு பொறியிலாளரான 25 வயது ஜோர்டன் ஜோன்சன் டோயில் என்ற அந்த பிரிட்டிஷ் பிரஜை, மலேசியாவிற்கு தனியொரு நபராக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த மே 27 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார். பங்சாரில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்றிருந்த வேளையில் அவர் காணாமல் போனார்.

எனினும் அவரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவரின் இறப்பைப் போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியிருப்பதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS