பாரிஸ், ஜூன்.08-
நாளை நடைபெறவிருக்கும் யுஏஃபா நேஷன்ஸ் லீக் கால்பந்தின் இறுதியாட்டத்தில் போர்ச்சுகலும் ஸ்பெயினும் சந்திக்கவிருக்கின்றன. இந்நிலையில் அவ்விரு நாடுகளின் நட்சத்திரங்களான கிரிஸ்டியானோ ரொனால்டோவின் அனுபவம் நிறைந்த ஆட்டமும் லெமின் யமனின் சுறுசுறுப்பான ஆட்டமும் ரசிகர்களின் கவன ஈர்ப்பாக உள்ளன. அவ்விரு வீரர்களும் தத்தம் நாடுகளின் வலுவானத் தூண்களாகத் திகழ்கின்றனர்.
கடந்த வாரம் போர்ச்சுகல், அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 2க்கு 1 என்ற கோல்களில் தோற்கடித்தது. போர்ச்சுகலின் ஒரு கோலை ரொனால்டோ அடித்திருந்தார். அனைத்துலக அரங்கில் அது அவரது 137 ஆவது கோலாகும். ஈராயிரத்தாம் ஆண்டுக்குப் பிறகு ஜெர்மனிக்கி எதிராக போர்ச்சுகல் ஈட்டிய முதலாவது வெற்றி அதுவாகும்.
இவ்வேளையில், அரையிறுதில் பிரான்ஸை வீழ்த்திய ஸ்பெயின், இறுதியாட்டத்தில்ம் போர்ச்சுகலுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.