கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பொகட்டா, ஜூன்.08-

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் பொகோட்டா அருகே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இது மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் தாக்கம் உடனடியாக இருந்தது. கட்டடங்கள் அசைந்தன, சைரன்கள் ஒலித்தன, பீதியடைந்த குடியிருப்பாளர்கள் தெருக்களில் குவிந்தனர் எனக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS