மானிய விலையில் திரவ பெட்ரோலிய எரிவாயு

கோலாலம்பூர், ஜூன்.08-

சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகங்களுக்கு மானிய விலையில் திரவ பெட்ரோலிய எரிவாயு – எல்பிஜேவைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய மலாய் சலவைத் தொழில் முனைவோர் சங்கம் மூலா கோரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு வணிகங்களுக்கான சேவை பிரிவில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மானிய விலையில் திரவ பெட்ரோலிய எரிவாயு பயன்பாட்டை உணவு , பானத் துறைக்கு மட்டும் அரசாங்கம் அனுமதித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இது சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS