கோலாலம்பூர், ஜூன்.09-
லோரியின் பின்புறம் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், கடும் காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர், டூத்தா – உலு கிளாங் நெடுஞ்சாலையின் 4 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கோலாலம்பூரிலிருந்து கோம்பாக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டு இருந்த 17 வயது ஆடவர் உயிரிழந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் தெரிவித்தார்.