அந்த மாற்றுத் திறனாளி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

குவாந்தான், ஜூன்.09-

பகாங், ஜெராந்துட்டில் கடந்த ஜுன் 2 ஆம் தேதி முதல் காணாமல் போன மற்றுத் திறனாளி ஒருவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

36 வயது சப்ரி இஸ்மாயில் என்ற அந்த மாற்றுத் திறனாளியின் உடல் இன்று காலை 10.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

அந்த மாற்றுத் திறனாளி, ஆகக் கடைசியாகக் காணப்பட்ட ஜெராந்துட், தாமான் ஶ்ரீ எம்புன் வீடமைப்புப் பகுதியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS