தெமர்லோ, ஜூன்.10-
நேற்று மாலையில் பெய்த கனத்த மழை மற்றும் புயலில் பகாங், தெமர்லோவில் 75 வீடுகள் கடுமையாக சேதமுற்றன.
மாலை 5 மணிக்கு வீசிய இந்த புயலில் தெமர்லோ, தாமான் ஶ்ரீ கெரினாவ், கம்போங் பூலாவ் தெராப், தாமான் பாமா காசி, தாமான் பூலாய் பிஸ்தாரி மற்றும் கம்போங் ஜாலான் மாரான் பத்து 4 ½ ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக தெமர்லோ பேரிடர் நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.
எனினும் உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.