ஈப்போ, ஜூன்.10-
தஞ்சோங் மாலிம் உப்சி கல்வியியல் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற மாணவர்களின் உயிர் காக்க ஈப்போ, ராஜ பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை ரத்த தானத்தைக் கோரியுள்ளது.
ரத்த தானம் செய்ய விரும்புகின்றவர்கள், திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ரத்த தானம் செய்யலாம் என்று அந்த மருத்துவமனை, பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12.15 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2.45 மணி முதல் இரவு 9 மணி வரை ரத்த தானம் வழங்கப்படுவது வரவேற்கப்படுவதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரத்த தானம் செய்ய விரும்புகின்றவர்கள், பங்குனான் ஜபாத்தான் பெருபாதான் டிரான்ஸ்ஃபுசி, பிலிக் பெண்டெர்மாஆன் டாரா HRPB பிரிவுக்கு நேரடியாக வருகை புரியலாம் என்று அந்த மருத்துவமனை கேட்டுக் கொண்டுள்ளது.