ஜார்ஜ்டவுன், ஜூன்.10-
பினாங்கில் முத்தியாரா வழித்தடத்திற்கான எச்ஆர்டி ரயில் திட்டம் தொடர்பில் பினாங்கு மாநில அரசுக்கும், கூட்டரசு அரசாங்கத்திற்கும் இடையில் எழுந்த விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
கடந்த மாதம் புத்ராஜெயாவில் தமது அமைச்சில் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவுடன் நடைபெற்ற சந்திப்பில் மாநில அரசிடமிருந்து அனுமதி கடித விவகாரம் உட்பட எழுப்பப்பட்ட பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பினாங்கில் எச்ஆர்டி ரயில் திட்டத்திற்கான அடிப்படை வேலைகள் வெகுவிரைவில் தொடங்கும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.