கோலாலம்பூர், ஜூன்.10-
மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் வடப் பகுதிக்கான இடிஎஸ் ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமானதற்கு, கேபள் திருடப்பட்டதே முக்கியக் காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேபள் திருட்டின் காரணமாக வடப் பகுதிக்கான மூன்று வழித்தடங்களின் தொடர்புச் சேவை துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக ரயில் சேவைகளில் 60 நிமிடம் தாமதம் ஏற்பட்டதாக மலாயன் ரயில்வே பெர்ஹாட் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.