ரவாங், ஜூன். 11-
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கோம்பாக் கிளை, இன்று பிற்பகல் 2 மணியளவில் ரவாங்கில் உள்ள சலவைத் தூள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டது.
பத்து பேர் கொண்ட அமலாக்கக் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் சலவைத் தூள் மருந்து தயாரிப்புக்கு சட்டவிரோதமாகச் சின்னத்தை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்றவருக்குச் சொந்தமானச் சின்னத்தை பயன்படுத்துவது குற்றமாகும். அறிவார்ந்த சொத்துக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 29 ஆயிரத்து 680 ரிங்கிட் மதிப்புள்ள 2, 120 போத்தல்களில் சலவைத் தூள் மருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்க அதிகாரி முகமட் ஹனிஸாம் கெசேக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.