பெட்டாலிங் ஜெயா, ஜூன்11-
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் பல்பொருள் விற்பனைக் கடையின் முகப்பிடத்தில் இரு ஆடவர்கள்
சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த கைகலப்பு தொடர்பான காணொளியைத் தொடர்ந்து அதில்
சம்பந்தப்பட்டுள்ளவர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதில் உள்ளூரைச் சேர்ந்த 44 வயது நபரும், வெளிநாட்டவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் இரு போலீஸ் புகார்களைத் தாங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் கூறினார்.