தமக்கு எதிராக குற்றவியல் வழக்கைப் பதிவு செய்த முறை தொடர்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஆய்வாளர் யூசோப் ரவுத்தர், போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்கு 7 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளார்.
அந்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் போலீஸ் படைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது வழக்கறிஞர் நிறுவனமான லா பிரக்டிஸ் ஓஃப் ரஃவிக் மூலம் அவர் நினைவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளைத் தாம் வைத்திருந்ததாகக் கூறி, தம்மை போலீசார் கைது செய்த முறை, தாம் போலீசாரின் பொறியில் சிக்க வைக்கப்பட்டதாக யூசோப் ரவுத்தர் குற்றஞ்சாட்டுகிறார்.
32 வயதான யூசோப் ரவுத்தரைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இல்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.