பிக் சுவீப்பில் தலா 3 ரிங்கிட் டிக்கெட்டில் அதிகத் தொகையாகக் கொண்ட 3 வெற்றி வாய்ப்புகள்

கோலாலம்பூர், ஜூன்.16-

நாட்டின் முன்னணி லாட்டரி குலுக்கு நிறுவனமான பான் மலேசிய. சுவீப்ஸ் சென்டிரியான் பெர்ஹாட், தனது புதுபிக்கப்பட்ட பிக் சுவீப் லாட்டரி குலுக்கு டிக்கெட்டுகள் பாரம்பரியத்தில் புதுமையுடன் இணைந்து முதல் பரிசாக 2 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தலா 3 ரிங்கிட் டிக்கெட்டில் அதிக மதிப்பைக் கொண்ட 3 வெற்றி வாய்ப்புகளுக்கான திட்டத்தை பிக் சுவீப் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.

முதல் பரிசு 2 மில்லியன் ரிங்கிட், அடுத்து, டிக்கெட்டில் உடனடியாக கிறுக்கிப் பார்க்கும் இன்ஸ்டன் ஸ்கிரட்ச் வெற்றி வாய்ப்பின் வழி முதல் பரிசாக ஒரு லட்சம் ரிங்கிட் மற்றும் 8 ஆயிரத்து 888 ரிங்கிட், 888 ரிங்கிட் மற்றும் 88 ரிங்கிட் என மூன்றடுக்கு வெற்றி வாய்ப்புகள் பிக் சுவீப்பில் வாடிக்கையாளர்களுக்குக் காத்திருக்கின்றன.

வாடிக்கையாளர்கள், லாட்டரி குலுக்கு 6/25 முதல் லாட்டரி குலுக்கு 8/25 வரைக்குமான பி சுவீப் டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட பல்வேறு ராசி அடையாளங்களைச் சேகரிக்கலாம் என்கிறார் பான் மலேசியன் சுவீப்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சிம் கோக் சூன்.

கடந்த ஜுன் 12 ஆம் தேதி கோலாலம்பூர் இம்பியில், Tslaw டவர் கட்டத்தில் விஸ்கி ஹவுஸ் கேஎல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிக் சுவீப் லாட்டரி டிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதுமை குறித்து சிம் கோக் சூன் விவரித்தார்.

டிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட முதன்மை ராசி மற்றும் தேவையான ராசி அடையாளங்களின் கலவையை அடிப்படையாகக் கொண்டு, வாடிக்கையாளர், கோரப்படும் ராசி அடையாளங்களைச் சேகரித்து, வெற்றிப் பரிசுகளைக் கோர முடியும். இதற்கான இறுதி நாள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியாகும் என்று சிம் கோக் சூன் விளக்கினார்.

பிக் சுபீப் ஆட்டம், உண்மையிலேயே உற்சாகம் மற்றும் வேடிக்கை நிறைந்தது என்றார் சிம் கோக் சூன்.

WATCH OUR LATEST NEWS