அந்த பேருந்து ஓட்டுநரின் வாகனமோட்டும் லைசென்ஸ் ரத்து

கோலாலம்பூர், ஜூன்.16-

உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்பட்ட பேருந்து விபத்தில் அந்தப் பேருந்தைச் செலுத்திய ஓட்டுநரின் வாகனமோட்டும் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த ஓட்டுநருக்கு எதிராகச் சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு வழிவிடும் வகையில் ஜேபிஜே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS