தாயும் பிள்ளையும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பரிதவிப்பு

பத்து பஹாட், ஜூன்.17-

எம்பிவி வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் தாயும், மகளும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.40 மணியளவில் ஜோகூர், ஆயர் ஹீத்தாம், கம்போங் தாலாங் புனுட் என்ற இடத்தில் நிகழ்ந்தது. இதில் 36 வயது மாதுவையும், அவரின் 11 வயது மகளையும் மீட்பதற்குத் தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவி நாடப்பட்டது.

இதில் கடும் காயங்களுக்கு ஆளாகிய மாதுவும் அவரின் மகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS