கோலாலம்பூர், ஜூன்.17-
சிக்கனக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, கோலாலம்பூரிலிருந்து இந்தோனேசியாவிற்கு இரண்டு புதிய வழித்தடங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா பலேம்பாங் மற்றும் செமாராங் ஆகிய இரண்டு புதிய வழித்தடங்களுக்கு ஏர் ஆசியா நேரடி விமானச் சேவையை மேற்கொள்கிறது.
இதன் வழி மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் ஏர் ஆசியா நிறுவனம், வாரத்திற்கு 188 விமானச் சேவைகளை வழங்குகிறது என்று அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.