எஸ்எஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொதுமக்களின் கருத்துகள் கண்டறியப்படும்

ஈப்போ, ஜூன்.17-

எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியை அடுத்த மாதம் முதல் தேதி அரசாங்கம் அமல்படுத்தவிருக்கும் வேளையில் அதற்கு முன்னதாகவே பொதுமக்களின் கருத்துகளை அரசாங்கம் கண்டறியும் என்று நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் முகமட் கமில் அப்துல் முனிம் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆக்கப்பூர்வமானக் கருத்துக்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் அதே வேளையில் பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்எஸ்டி வரியின் விரிவாக்கம் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தாது. மாறாக, அரசாங்கம் முன்பு அறிவித்த பிரிவுகளுக்கு மட்டுமே இந்த எஸ்எஸ்டி வரி பொருந்தும் என்று முகமட் கமில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS