புதுடெல்லி, ஜூன்.18-
ஆமதாபாத் விமான விபத்தை அடுத்து கடந்த 6 நாட்களில், போயிங் 787 – 8 டிரீம்லைனர் ரக விமானச் சேவை, 66 முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஆமதாபாத் விமான விபத்தின் சுவடுகள் இன்னமும் பலர் நினைவை விட்டுப் போகவில்லை. விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
இந்த விபத்தை அடுத்து விமானப் பயணம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள், பயணத் திட்டம் உள்ளிட்டவை குறித்து பலரும் விழிப்புணர்வு பெறத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் விமானப் பயணம் பற்றிய அச்சத்தையும் பலரிடம் காண முடிகிறது.