கோலாலம்பூர், ஜூன்.20-
லங்காவி கடற்பகுதியில் இரண்டு ஃபைபெர் இயந்திரப் படகுகளின் மூலம் போதைப்பொருள் கடத்தும் முயற்சியைக் கடல்சார் போலீசார் வெற்றிகரமான முறியடித்துள்ளனர்.
லங்காவி, தாமான் நீலாம் அருகில் நேற்று முன்தினம் அதிகாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பெரியளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.