கோலாலம்பூர், ஜூன்.21-
கடந்த மாதம் பிகேஆர் கட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, தாம் பதவி விலகியதற்காக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி விமர்சிக்கப்பட்டபோது அவர் கல்வி அமைச்சைக் கேலி செய்தார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நம்பிக்கையைத் தாம் இழந்தது தெளிவாகத் தெரிந்ததாலேயே தாம் பதவி விலகியதாகவும், அதனால் சீர்திருத்தங்களைத் திறம்படச் செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார். தாம் ஒரு “செயலற்ற அமைச்சர்” அல்லது “வெறுமென தலையாட்டும் பொம்மை” ஆக இருக்க விரும்பவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.