கோலாலம்பூர், ஜூன்.22-
புதிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலை அரசியல் கட்சியுடன் தொடர்புப்படுத்தும் தகவல் இணையத்தில் பரவியது அவதூறு என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இதில் தவறான தகவல்கள் இருந்ததாகவும், காலிட் இஸ்மாயில் எந்த அரசியல் கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதில்லை என்றும் அவர் கூறினார். இத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வதில் மலேசிய ஊடக மன்றத்தின் முக்கியத்துவத்தையும் ஃபாமி வலியுறுத்தினார்.