எங்கள் மீது நம்பிக்கை வைத்து கிடப்பில் உள்ள 222 திட்டங்களையும் அங்கீகரியுங்கள் – ஜோகூர் முதல்வர் முன்மொழிவு

ஜோகூர் பாரு, ஜூன்.22-

மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைமைக்கு வழங்க வேண்டும் என ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி முன்மொழிந்துள்ளார். 2016 முதல் கடந்த ஆண்டு வரை செயல்படுத்தப்பட வேண்டிய 222 திட்டங்கள் இன்னும் கிடப்பில் உள்ளது என்றும், இவற்றின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரிங்கிட் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

சாலைகள், பள்ளி வாசல்கள், மருத்துவமனைகள், சுகாதார கிளினிக்குகள் போன்ற பல்வேறு வசதிகள் இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக இருந்தாலும், இன்னமும் தொடங்கப்படவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS