மாமன்னரின் கூடுதல் உத்தரவு குறித்த மறு ஆய்வு தோல்வி அடைந்தாலும், நஜிப் பரோலில் விடுதலை ஆகலாம் – வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தகவல்

கோலாலம்பூர், ஜூன்.22-

மாமன்னரின் கூடுதல் உத்தரவு இருப்பதை உறுதிப்படுத்தும் நீதித்துறை மறுஆய்வில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தோல்வியடைந்தால் கூட, சிறையிலிருந்து விடுதலையாவதற்கு இன்னும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் நஜிப் பரோலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவரது வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தெரிவித்தார்.

“ஆறு வருட சிறைத் தண்டனை குறைக்கப்பட்டால், இரண்டு வருடங்கள் தானாகவே ‘automatic remission’ பெற்று விடுவார். அவர் ஏற்கனவே மூன்று வருடங்கள் சிறையில் இருந்துள்ளார், எனவே இன்னும் ஒரு வருடமே உள்ளது. அவர் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்” என்று ஷஃபி கூறினார். நஜிப் சிறையில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்வதாகவும், அவரது நடத்தை ஒரு நல்ல கைதிக்கு உதாரணமாக இருப்பதாகவும் ஷாஃபி மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS