கோலாலம்பூர், ஜூன்.22-
மருத்துவக் கல்வியை முடித்த டாக்டர் சௌந்தர்யாவுக்கு வாழ்த்து கூற அவரது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு நேரில் சென்றார் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம். சௌந்தர்யாவின் மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த அவசரமாக உதவி கோரிய கடிதம் தமக்கு அனுப்பப்பட்டதை நினைவு கூர்ந்து முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஒரு லாரி ஓட்டுநரான சௌந்தர்யாவின் தந்தை, தனது 60 வயதிலும், மகளை மருத்துவராகப் பார்க்கும் கனவுடன் சௌந்தர்யாவுக்கு உதவக் கடுமையாக உழைத்தார் என்றும் ஐந்து வருடக் கடின உழைப்புக்குப் பிறகு, சௌந்தர்யா ஒரு மருத்துவப் பட்டம் பெற்றதுடன், மூன்று முறை டீன் விருது உட்பட, சிறந்த மாணவிக்கான விருதையும் வென்றுள்ளது தமக்கு மேலும் பெருமையாக இருந்ததாக அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
