பெண் ஆசிரியர் கைது, போலீஸ் துறையிடம் ஒப்படைக்கிறோம்

சுங்கை பட்டாணி, ஜூன்.23-

மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கெடா, சுங்கை பட்டாணியில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு பெண் ஆசிரியர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை போலீஸ் துறையிடமே தாங்கள் ஒப்படைப்பதாக கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹஷிம் தெரிவித்தார்.

இந்த விவகாரம், போலீஸ் துறை வரை சென்று விட்டதால், இதில் தலையிடுவதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு எந்தவோர் அறிக்கையும் வெளியிடாது என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS