பெட்டாலிங் ஜெயா, ஜூன்.23-
செலாயாங் பிகேஆர் தொகுதி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சால்லே மறுத்துள்ளார்.
ஒரு தொகுதியில் உள்ள செயற்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 26 பேரில் 18க்கும் மேற்பட்டவர்கள் பதவி விலகினால் மட்டுமே ஒரு தொகுதி கலைக்கப்படும் என்று அவர் விளக்கினார்.
ஒரு தொகுதியில் 18 பேர், தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதர எண்மர், நியமனம் வழி செயற்குழுவில் சேர்க்கப்படுகின்றனர். ஆக ஒட்டுமொத்தத்தில் 26 பேர் தொகுதிப் பொறுப்பாளர்களாக இருப்பர் என்று அவர் தெளிவுபடுத்தினார்.