10 A பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம்

செலாயாங், ஜூன்.24-

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 10ஏ + மற்றும் அனைத்துப் பாடங்களிலும் ஏ கிரேட் பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இயல்பாக இட வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

அதே வேளையில் ஏ கிரேட் பெற்ற மாணவர்களும், மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பயில இடம் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய மாணவர்களின் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும் என்று ஃபாட்லீனா சீடேக் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS