நம்பிக்கை மோசடி, முன்னாள் நிதி அதிகாரிக்கு 16 மாதச் சிறை

கோலாலம்பூர், ஜூன்.24-

தாம் பணிபுரிந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்த குற்றத்திற்காக பெட்ரோல் நிலையத்தின் முன்னாள் நிதி அதிகாரி ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 16 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

சித்தி நுராயின் முகமட் கஸாலி என்ற 37 வயதுடைய அந்தப் பெண்மணிக்கு 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பதாக நீதிபதி அஸ்ருல் டாருஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் செயல்பட்டு வரும் பெட்ரோன் எண்ணெய் நிலையத்தை நிர்வகித்து வரும் எச்டிஜே ஓயில் எண்டர்பிரைஸ் கோலாலம்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தை மோசடி செய்ததாக அந்த முன்னாள் பெண் அதிகாரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

WATCH OUR LATEST NEWS