மலாய்க்கார அல்லாத ஒருவர், ஆயுதப்படையில் முக்கியப் பதவி: மலாக்கா பெரிக்காத்தான் நேஷனல் பெருமைப்படுகிறது

மலாக்கா, ஜூன்.26-

மலேசிய ஆயுதப்படையில் மலாய்க்கார அல்லாத ஒருவர் லெப்டனன் ஜெனரலாக நிமிக்கப்பட்டது குறித்து மலாக்கா மாநில பெரிக்காத்தான் நேஷனல் பெருமிதம் கொள்வதாக அதன் மலாக்கா மாநிலத் தலைவர் பக்ரி ஜமாலுடின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லெப்டனன் ஜெனரல் பொறுப்புக்கு ஜோனி லிம் எங் செங் நியமிக்கப்பட்டது மிகப் பெரிய கெளரவாகும். மலாக்கா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர், ஆயுதப்படையில் உயரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டது மூலம் மலாக்கா மாநிலம் பெருமை கொள்வதாக பக்ரி ஜமாலுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS