சிரம்பான், ஜூலை.05-
சிரம்பானில் உள்ள ஒரு பேரங்காடி கட்டடத்தில் வீற்றிருக்கும் ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் மரணமுற்றார்.
நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 59 வயதுடைய நபர் உயிரிழந்ததாக தீயணைப்பு மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
அந்த நபரின் உடல் ஒன்றாவது மாடியில் மீட்கப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.