சீன அதிபரைச் சந்தித்தார் அன்வார்

சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மரியாதை நிமிர்த்தமாக இன்று மாலையில் தலைநகர் பெய்ஜிங்கில் ‘Great Hall Of The People’ மாளிகையில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்தார்.

பிரதமர் அன்வாருக்கு மகத்தான வரவேற்பை நல்கிய சீன அதிபர் ஸி ஜின்பிங், சுமார் 45 நிமிடம் நடைபெற்ற சந்திப்பில் பல தரப்பட்ட விவகாரங்கள் குறித்து கருத்து பறிமாற்றம் செய்துக்கொண்டனர்.
கடந்த மார்ச் 10 ஆம் தேதி மூன்றாவது தவணையாக அதிபர் பதவிக்கு ஸி ஜின்பிங், தேர்வுச் செய்யப்பட்டப் பிறகு, அவர் சந்தித்த முதலாவது வெளிநாட்டுத் தலைவராக அன்வார் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS