மலாக்கா மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சராக தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரவுப் யூசுப் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
மலாக்கா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவருமான அப்துல் ரவுப் யூசுப், பிற்பகல் 3.33 மணியளவில் மலாக்கா ஶ்ரீ நெகிரியில் மாநில ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் முன்னிலையில், பதவியேற்றதுடன் ரகசிய காப்புப் பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில், மலாக்கா முன்னாள் முதலமைச்சர் சுலைமன் முகமட் அலு மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.