12,380 அந்நிய நாட்டவர்கள் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்

இவ்வாண்டில் மலேசியாவிலிருந்து 12,380 அந்நிய நாட்டவர்கள், அவர்களின் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார். திருப்பி அனுப்பட்டுவர்களில் 9,606 பேர் ஆண்கள் என்றும் 2,774 பேர் என்றும் பெண்கள் என்றும் அவர் விளக்கினார்.

இவர்களின் பெரும்பாலோர் பிலிப்பைன்ஸ, இந்தோனேசியா மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள். தவிர குடிநு​ழைவுத்துறையின் தற்காலிக தடுப்பு முகாம்கள் உட்பட 21 டிப்போக்களில் இன்னமும் 11,650 அந்நிய நாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நிபோங் தெபால், சுங்கை பகாப் சட்டவிரோத குடியேறிகளுக்கான தடுப்பு முகாமை பார்வை​யிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ருஸ்லின் ஜுசோ இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS