Mamak உணவகங்களில் பிரியாணி உணவுக்கு உள்ளாடை பயன்படுத்துகிறார்களா?

இந்திய முஸ்லிம் உணவகங்களில் சிலர், பிரியாணி உணவு தயாரிப்பதற்கு பானையின் அடியில் ஆண்களின் உள்ளாடைகளை பயன்படுத்துவதாக மாது ஒருவர், வாயிலாக பேசி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இருப்பதை கண்டிக்கும் வகையில் இன்று போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

Presma எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவகங்கள் நடத்துநர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மலாய் மாதுவிற்கு எதிராக இப்போலீஸ் புகாரை செய்துள்ளனர். இந்த நாட்டில் பல ஆண்டு காலமாக வேரூன்றி விட்ட Mamak உணவகங்களை இழிப்படுத்தும் தீய நோக்குடன் அந்த மாது இப்படியொரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்று அந்த சங்கத்தின் தலைவர் Datuk Jawahar Ali Taib தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அவதூறான கருத்தை பதிவேற்றம் செய்துள்ள அந்த மாதுவின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்ற போதிலும் அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று Jawahar Ali தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்