MFL-லின் பரிசீலிக்கப்பட்ட முடிவு குறித்து சிலாங்கூர் FC மேல்முறையீடு செய்யும்!

சிலாங்கூர், ஜுன் 28 –

ஜோகூர் தாருல் தக்சிம் – JDT-க்கு எதிரான சும்பங்சிஹ் கிண்ண காற்பந்தாட்டத்திற்கு வருகைப் புரியாததால் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனையை, மலேசிய காற்பந்து லீக் – MFL குறைத்திருந்தாலும், அது குறித்து மேல்முறையீடு செய்ய போவதாக, சிலாங்கூர் FC தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, 100 ஆயிரம் ரிங்கிட் அபராதம், உபசரணை அணியான JDT-க்கும் MFL-லுக்கும் இழப்பீடு, லீக்கில் 3 புள்ளிகள் குறைப்பு, ரசிகர்கள் இன்றி காற்பந்தாட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தண்டனைகள் சிலாங்கூர் FC-க்கு வழங்கப்பட்டன.

அத்தண்டனை குறித்து, சிலங்கூர் சுல்தான் சுல்தான் ஷரபுதீன் ஐத்ரிஸ் ஷாவை மூர்க்கமடைந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட தண்டனைகளை பரிசீலித்த MFL, அபராதத் தொகையை 60 ஆயிரம் வெள்ளியாக குறைத்ததோடு, 3 புள்ளிகளை குறைக்கும் முடிவையும் கைவிட்டது.

அத்துடன், ரசிகர்கள் இன்றி காற்பந்தாட்டத்தை நடத்தும் முடிவையும் மீட்டுக்கொள்வதாக நேற்று அறிவித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்