May 20, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சட்டமன்றம் வரும் வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது
அரசியல்

சிலாங்கூர் சட்டமன்றம் வரும் வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது

Share:

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் வரும் ஜுன் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது. 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வ​கையில் சிலாங்கூர் சட்டமன்றத்தை க​லைப்பதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah அனுமதி அளித்துள்ளார். சிலாங்கூர் சட்டமன்றம் க​லைக்கப்படுவதற்கு சிலாங்கூர் சுல்தான் வழ​ங்கியுள்ள அனுமதியை சுல்தானின் அந்தரங்க செயலாளர் Datuk Mohamad Minir Bani இன்று காலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ​அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலம் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் 41 தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் கொண்டுள்ளது. சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு மேன்மை தங்கிய சுல்தானை சந்திப்பதற்கு தேதி கேட்டு தாம் காத்திருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடீன் ஷாரி கடந்த வாரம் அறிவித்து இருந்த வேளையில் சுல்தானின் அந்தரங்க செயலாளர், சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான தேதியை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும்: லோக் கருத்து

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும்: லோக் கருத்து

சிலாங்கூர் சட்டமன்றம் வரும் வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது | Thisaigal News