மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சி. சிவராஜ், கட்சியின் மத்திய செயலவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிவராஜ் நீக்கத்தை மஇகா உயர் மட்டத் தலைவர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகா உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் உதவித்தலைவர் பதவியை தற்காத்துக்கொள்வதில் தோல்விக் கண்ட சிவராஜ், பின்னர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினாக நியமிக்கப்பட்டார்.
எனினும் மத்திய செயலவையிலிருந்து சிவராஜ் அகற்றப்பட்டு இருப்பது தொடர்பில் அவருக்கு கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் சிவராஜ், மேலவை உறுப்பினராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை


