தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க மலேசியா தவறுமானால் அது சுக்கு நூறாகிவிடும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள உறுப்புக்கட்சிகளும் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று 101 East Al Jazeera விற்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் அன்வார் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனவா? என்று எழுப்பட்ட கேள்விக்கு ஆம் என்று அன்வார் பதில் அளித்துள்ளார்.
தாம் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டிற்கு தலைமையேற்றுள்ள பிரதமர். அந்த வகையில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கு தாமும் தயாராகி வருவதாக அன்வார் தமது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


