May 20, 2026
Thisaigal NewsYouTube
மஇகா கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் இல்லை
அரசியல்

மஇகா கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் இல்லை

Share:

டத்தோஸ்ரீ சரவணன் ஏமாற்றம்

மஇகா தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குக் கல்வி அமைச்சு பதில் அளிக்காதது குறித்து தமது ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

தாம் கேட்ட கேள்வி ஒன்று அளிக்கப்பட்ட பதில் வேறு என்று தமது ஏமாற்றத்தை சரவணன் முகநூலில் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவும் திட்டங்கள் குறித்து தாம் முன்வைத்த கேள்விகளுக்கு எந்த பதிலையும் கல்வி அமைச்சு வழங்கவில்லை என்று சரவணன் குறிப்பிட்டார்.

மாறாக, 2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க முழு உதவிப்பெற்ற பள்ளிகளுக்கும், பகுதி உதவிப்பெற்ற பள்ளிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான தகவல் மட்டுமே வழங்கப்பட்டதாக சரவணன் தமது அதிருப்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்

இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பல்லின மலேசியாவை பிகேஆர் ஆதரிக்கும் - பிரதமர் அன்வார்

இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பல்லின மலேசியாவை பிகேஆர் ஆதரிக்கும் - பிரதமர் அன்வார்